Monday, March 29, 2010

பாரதி !!!

It is for my friend who expired two days back .......


கைக்குள் கை கோர்த்து
புத்தக பை சுமந்து
பள்ளிச்சாலையில் பயின்ற அந்த நாட்கள்
உச்சி சிலிர்த்த நாட்கள்
உதிரம் தோயக்குதடா!
உச்சி முதல் பாதம் வரை உலுக்கி எடுக்குதடா ! !

வேண்டா வெறுப்பாய்
கூடா நட்பாய்
சண்டையிட்டு திரிந்த நாட்கள்
சண்டையுடன் நின்றிருக்கலாம் .........

மூத்தவன் நெஞ்சு பிளக்க
உன் குடி பெயர்க்க
அத்துடன் நம் நட்பு முடிந்து இருக்கலாம் ...........

நண்பனின் மிதிவண்டி பயணத்திலோ
சிவகாசியிலோ
சிதைந்திருக்கலாம் ....................

கருவறை தாண்டிய நாள் முதலாய்,
கை கோர்த்திருந்தாயே


இபொழுது ஏன் விடுவித்துகொண்டாய்..............
பிற தேசம் போய் ஏன் பிணமானாய் ..........................

நவயுக பாரதியே! நட்டாற்றில் விட்டாயடா !!


I miss u da .............

No comments:

Post a Comment