Saturday, May 14, 2011

வலக்கண்ணும் இடக்கண்ணும் --- அவளும் நானும்

எனக்கும் குளியலறைக்கும் இடையில் தான் எத்தனை எத்தனை இரகசியங்கள்
அதை எனது குறிப்பேட்டில் பேனா முனையாலும்
நண்பனின் தோழ்களுக்கு கைகளாலும்
நடுநிசி இருளுக்கு இமை மூட மறக்கும் எனது விழிகளாலும்
அன்னை மடியில் தலை சாய்ந்து அவளுக்கு மனதாலும் - பகிர்ந்திட
அத்தனை அங்கங்களும் துடித்த நாட்கள் அத்துனை
அத்துனை .........

இரு நாள் விடுமுறையைக் கூட வீட்டில் கழிக்க முடியாமல்
ஞாயிறு மதியமே விடுதியை நாடிய நாட்கள் தான்
எத்தனை எத்தனை
புரியாத உனது மனதுக்கும் விடை தேடும் எனது கண்களுக்கும் உள்ள மர்மங்கள்
அத்துனை அத்துனை.........

விடுதி மைதானம் எனது துணை தேடியிருக்க தேவையில்லை
காரணமில்லாமல் நண்பனின் கரம் பற்றி சொல்லவும் முடியாமல் விழுங்கவும் வழி இல்லாமல்
பாகனிடம் பணியும் ஆனையைப் போல் பரிதவிதிருக்க
தேவையில்லை
அன்றே ஒரு விடை சொல்லி இருந்தால் ........

என் குறுந்தகவலுக்கு காதிருந்தும்
வீட்டிற்க்கு அழைப்பதும்
மீண்டும் மீண்டும் அவ்வுனர்ச்சிகளுக்கு உயிரோடு விஸ்வரூபம் கொடுக்கிறது
ஆழிப்பேரலையாக என்னை ஆட்கொள்கிறது .......

இனியேனும் இந்நேடுந்தொடரை நிறுத்திடு !
இறுதி தீர்ப்பு எழுதிடு !!

3 comments:

  1. very nice blog pls visit my blog

    ReplyDelete
  2. Kavithai super நண்பா..... யாருடா அவ? rompa Feel பண்ணி எழுதியிருக்கேயே...?

    ReplyDelete
  3. Hehe ... yaarum ill da ... Karpanai kathapaathiram :)

    ReplyDelete